இந்தியா

"மீனவர்களின் பிரச்னைகள் தேசிய அளவில் எடுத்துச் செல்லப்படும்" - ராகுல்காந்தி உறுதி

Veeramani

மீனவர்களின் பிரச்னைகளை தேசிய அளவில் காங்கிரஸ் எடுத்துச் செல்லும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த அகில இந்திய மீனவர் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அவர், மீனவர்களுக்கான மானியங்கள் மீது உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாடுகள் மற்றும் மீன்வள மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்குமாறு அகில இந்திய மீனவர் காங்கிரசின் தலைவர் பிரதாபனிடம் ராகுல் காந்தி கேட்டுள்ளார்.