இந்தியா

குஜராத்: கொரோனா வார்டில் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு

webteam

குஜராத் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்

குஜராத் ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். 

மருத்துவமனையின் ஐசியூ வார்டில் தான் முதலில் தீ பிடித்துள்ளது. மொத்தம் 33 பேர் மருத்துவமமையில் இருந்துள்ளனர். தீ விபத்து அறியப்பட்டதும் அனைவரையும் வெளியேற்றும் வேலையில் மருத்துவமனை நிர்வாகம் இறங்கியுள்ளது. அந்த நேரத்தில் ஐசியூ வார்டில் சிக்கி இருந்தவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் ஐசியூவில் மட்டும் 11 பேர் இருந்துள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.