காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

Headlines|விழா கோலம் பூண்ட மஹா சிவராத்திரி முதல் விஜய்க்கு அண்ணாமலையின் கேள்வி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, விழா கோலம் பூண்ட மஹா சிவராத்திரி முதல் விஜய்க்கு அண்ணாமலையின் கேள்வி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில், மஹா சிவராத்திரி விழா கோலாகலம். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏந்தி வழிபாடு.

  • தமிழகத்தின் பல்வேறு சிவாலயங்களிலும் இரவு குவிந்த பக்தர்கள். நான்கு கால பூஜைகள் நடைபெற, விடிய விடிய காத்திருந்து தரிசனம்.

  • கோவை ஈஷா மையத்தில் மஹா சிவராத்திரி விழா கோலாகலம். மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் திரை பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்பு.

  • 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவு. 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.

  • பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாநில மொழி கட்டாயம். தெலங்கானாவை தொடர்ந்து பஞ்சாப் அரசும் அறிவிப்பு.

  • மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் எல்கேஜி, யுகேஜி சிறுவர்கள் போல திமுகவும், பாஜகவும் அடித்துக் கொள்வதாக விஜய் சாடல். திராக செயல்பட்டால் எப்படி என்றும் மத்திய அரசுக்கு கேள்வி.

  • What bro?, நீங்களே பொய் சொல்லலாமா ப்ரோ? என விஜய்க்கு அண்ணாமலை கேள்வி. உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் மூன்று மொழி; தவெக தொண்டர்களுக்கு இருமொழியா? என்றும் காட்டம்.

  • தென்னிந்தியாவின் எந்த மாநிலத்திலும் மக்களவை தொகுதிக்கான இடம் குறையாது. என அமித் ஷா அறிவிப்பு

  • திமுக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம். தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாகக் கூறினாலும் தமிழ்நாட்டிற்கு பாரபட்சம்.

  • உத்தரபிரதேசத்திற்கு அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை உயர்த்துகிறார்கள் என்றும் டிகேஎஸ் இளங்கோவன் பதில்.

  • இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். அடுத்தடுத்த தோல்வியால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து.

  • காசாவில் அமலில் உள்ள முதற்கட்ட போர்நிறுத்தம் சனிக்கிழமையுடன் நிறைவு. போர்நிறுத்த நீட்டிப்பு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி தொடர்வதாக தகவல்.