இந்தியா

திடீரென தீப்பிடித்த கார்... 8 வயது குழந்தை கண்முன்னே தந்தை - கர்ப்பிணி தாய் பலியான சோகம்!

webteam

கேரள மாநிலம் கண்ணூர் அருகே, ஒடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த எட்டு மாத கர்ப்பிணியும், அவரது கணவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் குட்டியத்தூர் காரரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரஜித் (32). இவருடைய மனைவி ரீஷா (26). பிரஜித் கட்டிட கான்டிராக்டராக தொழில் செய்து வருகிறார். பிரஜித்-ரீஷா தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளநிலையில், தற்போது ரீஷா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் எட்டு மாத கர்ப்பிணியான மனைவி நிஷாவிற்கு வயிறு வலி எடுக்கவே, அவரை குட்டியாத்தூரில் உள்ள தனது வீட்டில் இருந்து கண்ணூர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மனைவி நிஷாவை முன்னிருக்கையில் அமரவைத்துவிட்டு பிரஜித் காரை ஓட்டியுள்ளார். காரின் பின் இருக்கையில் இவர்களுடைய எட்டு வயது மகள், நிஷாவின் தந்தை மற்றும் தாயார், பிரஜீத்தின் தாயார் என நான்கு பேர் அமர்ந்து வந்துள்ளனர்.

கண்ணூர் மருத்துவமனையை கார் நெருங்கும் போது, எதிர்பாராதவிதமாக அது தீ பிடித்து எரியத்தொடங்கியுள்ளது. அப்போது தீயை பார்த்த பிரஜித், காரை நிறுத்தி பின்னிருக்கையிலிருந்த நால்வரையும் வெளியேறச் சொல்லி இருக்கிறார். அவர்கள் நால்வரும் இறங்கிய நிலையில் காரில் தீ வேகமாக பற்றி எரியத்தொடங்கியதால், அப்ரஜித் மற்றும் ரீஷாவின் இரண்டு பக்க கதவுகளும் திறக்க முடியாதவாறு லாக் ஆகியுள்ளது.

காரிலிருந்து வெளியே வருவதற்கு இருவரும் போராடியநிலையில், கார் முழுவதும் பரவிய தீயால் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்ட கர்ப்பிணி மனைவியும், அப்ரஜித்தும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கண்ணூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஷார்ட் சர்க்யூட் பிரச்சனையால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பெற்றோர், தங்களுடைய குழந்தையின் கண் முன்னே, தீயில் கருகி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.