இந்தியா

'ஷாக்' அடித்த கரண்ட் பில்; விவசாயிக்கு ரூ.3.71 கோடி மின் கட்டணம்!

JustinDurai
இரு மாத மின் கட்டணமாக 3.71 கோடி ரூபாய் செலுத்தும்படி 'பில்' அனுப்பி வைக்கப்பட்டதை பார்த்து 'ஷாக்' ஆகியுள்ளார் விவசாயி ஒருவர்!
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டம் கிங்லா கிராமத்தை சேர்ந்தவர் பெமரம் படேல். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான கடையை வாடகைக்கு விட்டுள்ளார்.
அதில் ஒருவர் வாகனங்களை பழுது நீக்கும் மையம் நடத்தி வருகிறார்.
 
இந்த கடையில் கடந்த இரு மாதங்களில் மூன்று கோடியே 85 லட்சத்து 14 ஆயிரத்து 098 'யூனிட்' மின்சாரம் பயன்படுத்தியதாக கூறி 3.71 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தும்படி மின்சார அலுவலகத்தில் இருந்து ‘பில்’ அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெமரம் படேல் அந்த ரசீதுடன் மாநில அரசின் மின் நிர்வாக மையத்திற்கு சென்றார்.
 
அப்போது கணக்கீட்டாளரின் தவறால் இதுபோல் நடந்துள்ளதாக கூறிய அதிகாரிகள், சரியான மின் பயன்பாட்டினை கணக்கிட்டு ரூ.6,414 செலுத்தும்படி கூறியதையடுத்து நிம்மதி பெருமூச்சு விட்ட பெமரம் படேல் அந்த தொகையை கட்டினார்.