இந்தியா

`நடிகை பாலியல் வழக்கில் மஞ்சு வாரியர் என்னை சிக்கவைத்துள்ளார்’- நடிகர் திலீப் புது புகார்

நிவேதா ஜெகராஜா

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கவைத்ததாக, முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் மீது நடிகர் திலீப் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கில் 8-ம் பிரதியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் திலீப் மீது காவல்துறை மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை திலீப் தாக்கல் செய்துள்ளார். அதில், மலையாள சினிமாவின் சக்திவாய்ந்த ஒரு பிரிவினரின் தனிப்பட்ட பழிவாங்கல் எண்ணத்தின் காரணமாகவும், தொழில் போட்டி காரணமாகவும் வழக்கு புனையப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் தனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியருக்கும், கேரள காவல்துறையில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள உயர் காவல் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும் திலீப் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு விசாரணை நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.