இந்தியா

பிரதமர் மோடியை பாராட்டிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன்

webteam

வனப்பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடியை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்சென் பாராட்டியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சென் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை பாராட்டி பேசியுள்ளார். பாரதிய ஜனதா சார்பில் போடப்பட்ட ட்விட்டர் பதிவில், வனவிலங்கு பாதுகாப்பில் பிரதமர் மோடி மிகுந்த கவனம் செலுத்துவதாக ஹிந்தியில் ட்விட்டரில் பதிவு செய்து பாராட்டியுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவின் பின்னூட்டத்தில் பேசியிருக்கும் பீட்டர்சன், ”வனவிலங்கு பாதுகாப்பில் பிரதமர் மோடியின் முன்னெடுப்புகள் பாராட்டுக்குரியது எனவும், ஒவ்வொரு தலைவரும் பிரதமர் மோடியை பின்பற்ற வேண்டும் என்றும்” கெவின் பீட்டர்சென் கேட்டுக் கொண்டுள்ளார்.