இந்தியா

குப்வாரா என்கவுண்டர் - பாதுகாப்பு படை வீரர் உட்பட 5 பேர் உயிரிழப்பு

rajakannan

ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் நடத்தப்பட்ட என்கவுண்டரின் போது, சிஆர்பிஎப் வீரர்கள் உட்பட 5 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

குப்வாராவின் பபகுண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து, அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். நீண்ட நேரம் இந்தச் சண்டை நடைபெற்றது. 

இந்தத் தாக்குதலில், சிஆர்பிஎப் வீரர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல், பொதுமக்கள் தரப்பிலும் ஒருவர் பலியானார். அதேபோல், பயங்கரவாதிகள் தரப்பில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காயமடைந்த சில பயங்கரவாதிகள், சேதமடைந்த கட்டடங்களில் ஒளிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்த இடத்தில் இளைஞர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 4 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்தனர்.