இந்தியா

இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ராஜினாமா

webteam

இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பவர் சுனில் அரோரா. இவருக்கு அடுத்ததாக தலைமை தேர்தல் ஆணையராக 2021ஆம் ஏப்ரல் மாதம் பொறுப்பேற்க இருந்தவர் தற்போதைய இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா. இந்நிலையில் அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் அடுத்த மாதம் ஆசிய முன்னேற்ற வங்கியின் துணைத் தலைவராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் பரிந்துரையின்படியே, அவர் இந்தப் பதவியில் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.