இந்தியா

சமூக வலைத்தள நிர்வாகிகளுடன் தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை

rajakannan

வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்‌‌. 

மக்களவை மற்றும் சில மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதுதொடர்பான தகவல்களைத் தரும்படியும், சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை தாமாக நீக்குவது தொடர்பாக சமூக வலைத்தளங்களின் இந்திய  நிர்வாகிகளிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார். 

குறிப்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சமூக வலைத்தளங்களில் செயல்படும் அரசியல் கட்சிக‌ள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பரப்புரை நேரம் நிறைவடைந்தும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரப்புரை செய்யும் கட்சி மற்றும் கட்சியினர் தொடர்பான தகவல்கள் கேட்கப்படும் எனத் தெரிகிறது.