இந்தியா

மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு

Sinekadhara

மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள பபானி பூர், சாம்செர்கஞ்ச், ஜாங்கிர் பூர் ஆகிய 3 தொகுதிகளிலும், ஒடிஷாவில் பிப்லி தொகுதியிலும் செப்டம்பர் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பபானி பூர் தொகுதியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் எனத் தெரிகிறது. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில், நந்தி கிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா தோல்வியடைந்தார். எனினும், அவர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் அவர் வெற்றிபெறுவது அவர் ஆட்சியை தக்கவைக்க முக்கியமான ஒன்றாக இருக்கப்போகிறது.