இந்தியா

கேரளா: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு சத்தியாகிரக போராட்டம்

JustinDurai
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, கேரளாவில் ஆளுநர் மாளிகை முன்பு DYFI அமைப்பினர் தொடர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI பிரிவைச் சேர்ந்தவர்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு, தொடர் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.