இந்தியா

'புர்கா'வில் மறைக்கப்பட்ட தங்கம்: விமான நிலையத்தில் சிக்கிய பெண் !

நிவேதா ஜெகராஜா

தெலுங்கானாவில் புர்காவில் தங்கத்தை தைத்து கடத்தி செல்ல முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தின் தெலுங்கானாவின் ஷாம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் எடைகொண்ட தங்கத்தை தனது உடையில் கட்டி கடத்த முயன்ற துபாயை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த தங்கத்தை கடத்துவதற்காக, சிறு சிறு பாசிகளாக அதை செய்து கொண்டு, பின் அதை ரோடியத்தின் (rhodium) மூலம் முலாம் பூசி தனது புர்காவில் தைத்து அதை அணிந்திருந்திருக்கிறார் அந்தப் பெண். மேற்கொண்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.