இந்தியா

குடித்துவிட்டு போதையில் காதை கடித்து விழுங்கிய ஆசாமி !

webteam

டெல்லியில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்ற இளைஞரின் காது துண்டானது. கடித்த நபர் அந்த காதை விழுங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஜிதேந்தர் குமார். இவர் இரவு வீட்டுக்கு செல்லும் போது சுல்தான்பூரியில் சாலையில் இரு நபர்கள் குடித்து விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைகலப்பான நிலையில் அருகில் ஜிதேந்தர் குமார் அவர்களை சமாதானப்படுத்த சென்றார். குடிபோதையில் சண்டையிட்ட நபரில் ஒருவர் ஜிதேந்தரின் காதைக் கடித்தார். இதில் அவரது காது துண்டானது. எதிர்பாராதவிதமாக துண்டான காதையும் அந்த நபர் விழுங்கியுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜித்தேந்தருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடிபோதையில் சண்டையிட்ட நபர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சந்தோஷ் (43) மற்றும் தீபக் (23) என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 324 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.