இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றானது இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. சீனா அதிலிருந்து மீண்டாலும், ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 1,84,249 நபர்கள் இறந்துள்ளனர். 26,38,909 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 7,22,055 நபர்கள் குணமாகியுள்ளனர்.
இந்தியாவை பொருத்தவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 393 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதில் 681 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலங்களைப் பொருத்தவரையில் மகாராஷ்ட்ராவில் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 652 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் 2 ஆயிரத்து 407 பேருக்கும் டெல்லியில் 2 ஆயிரத்து 248 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.