தர்மேந்திர பிரதான் PT
இந்தியா

வினாத்தாள் கசிவுக்கு போராடிய தர்மேந்திர பிரதான்? கவனம் பெறும் 2021ஆம் ஆண்டு செய்தி!

NEET-UG வினாத்தாள் கசிவு போராட்டத்துக்கு இடையே, 1997 ஒடிசா வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய தர்மேந்திர பிரதானின் பழைய போராட்டச் சம்பவம் மீண்டும் கவனம் பெறுகிறது.

PT WEB

செய்தியாளர் ; M. மீரா

NEET-UG வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு முந்தைய ஒரு சம்பவம் இணையத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

Dharmendra Pradhan

1997-ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் பிரதான் பங்கேற்றதாகக் கூறப்படும் 2021-ஆம் ஆண்டின் செய்தி ஒன்று தற்போது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதே விவகாரத்திற்காகத் தற்போது ஓர் அமைச்சர் விமர்சனங்களை எதிர்கொள்வது ஒரு முரண்நகைச் சூழலாக இருக்கிறது.

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்ட ஒரு செய்தியில், பிரதானின் முன்னாள் நண்பர் ஒருவர் 1997-இல் ஒடிசா தலைமைச் செயலகத்திற்கு வெளியே நடைபெற்ற போராட்டம் ஒன்றை நினைவுகூர்ந்துள்ளார். வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அந்தப் போராட்டத்தின்போது, ​​காவல்துறையின் தடியடியில் பிரதான் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

Dharmendra Pradhan

1997-ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முயன்று கொண்டிருந்த காலகட்டமாகும். அதே சமயத்தில், ஒடிசாவில் வினாத்தாள் கசிவு விவகாரம் ஒன்று நடந்தது. அப்போது தர்மேந்திர பிரதான், 'அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' (ABVP) அமைப்பின் தேசியச் செயலாளராக இருந்தார்; இந்திய தேசிய காங்கிரஸின் அப்போதைய மாநில அரசுக்கு எதிராக 1,500 மாணவர்களைக் கொண்ட போராட்டத்தை, பிரதான் வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தப் போராட்டத்தின்போது, ​​அவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகவும், அதனால் அவருக்குப எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.