இந்தியா

ஷீர்டி விமான நிலையத்திற்கு அனுமதி

webteam

மகாராஷ்டிரா மாநிலம் ஷீர்டி அருகே அமைக்‍கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு விமானப் போக்‍குவரத்து இயக்‍குனரகம் அனுமதி அளித்துள்ளது.

​ஷீர்டியில் புகழ்பெற்ற சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்‍தர்களின் வசதிக்‍காக அங்கு விமான நிலையம் அமைக்‍க வேண்டும் என கோரிக்‍கை எழுந்தது. இதையடுத்து ஷீர்டியில் விமான நிலையம் அமைக்‍கப்பட்டது. விமான நிலையத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளன. இந்த விமான நிலையம் பொதுமக்‍களின் பயன்பாட்டுக்‍கு ஏற்றது எனக்‍கூறி விமானப்போக்‍குவரத்து இயக்‍குனரகம் அனுமதி அளித்துள்ளது.