இந்தியா

இந்தியாவில் வணிகரீதியான சர்வதேச விமானங்களுக்கான தடை நவ.30 வரை நீட்டிப்பு

Veeramani

இந்தியாவில் வணிகரீதியான சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை நவம்பர் 30 வரை நீட்டித்து விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சர்வதேச சரக்கு போக்குவரத்து விமானங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச திட்டமிடப்பட்ட விமானங்கள், குறிப்பிட்ட வழித்தடங்களில் தேவைக்கு ஏற்ப அனுமதிக்கப்படலாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.