இந்தியா

திருப்பதி: இலவச தரிசன டோக்கன்கள் கிடைக்காத பக்தர்கள் போராட்டம்

JustinDurai
இலவச தரிசனத்திற்காக டோக்கன்களை வழங்கவில்லை என திருப்பதியில் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன்கள் நாளை முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த நிலை நாளை வரை திருப்பதியில் உள்ள சீனிவாசம் கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டரில் நேற்றே டோக்கன்கள் வழங்கப்பட்டு விட்டன. எனவே அந்த கவுண்டரை தேவஸ்தானம் மூடி உள்ளது. இந்த நிலையில் இன்றும் இலவச தரிசன டோக்கன் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சீனிவாசம் வளாகத்திலுள்ள இலவச தரிசன டோக்கன் குவிந்தனர்.
கவுண்டர் மூடப்பட்டிருந்த நிலையில் இனிமேல் இங்கு இலவச தரிசனம் வழங்கப்படாது என்று அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் கூறியதால் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டும் எனக்கூறி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீனிவாசம் கட்டடம் எதிரில் இருக்கும் சாலையில் அமர்ந்து போக்குவரத்தை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பதி காவல் துறையினர் பக்தர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தி கலைத்தனர்.