இந்தியா

வெள்ளப்பெருக்கு எதிரொலி - சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை

கலிலுல்லா

கனமழை மற்றும் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை காரணமாக பம்பை ஆற்றுப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா தெரிவித்துள்ளார். மழை குறைந்து பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்தவுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.