இந்தியா

சந்திரயான்-2: இன்று காலை கவுன்டவுன் தொடங்கியது

சந்திரயான்-2: இன்று காலை கவுன்டவுன் தொடங்கியது

rajakannan

நிலவின் தென்துருவ பகுதிக்கு சந்திரயான் -2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை தொடங்கியது.

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் வகையில், உலக நாடுகளிலேயே முதல்முறையாக சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா ஏவ உள்ளது. நாளை அதிகாலை 2.51 மணியளவில் சந்திரயான்-2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான கவுன்ட் டவுன் காலை 6.51 மணிக்கு தொடங்கியது. சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டால், விண்வெளித்துறையில் இந்தியா, தமது அடுத்த மைல்கல்லை எட்டும்.