இந்தியா

டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது

rajakannan

டெல்லியில் ராணி ஜான்சி சாலையிலுள்ள அனாஜ் மண்டியில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு 30 தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தீ விபத்தில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் தீ விபத்தில் காயம் அடைந்துள்ளனர்.

விபத்தில் காயம் அடைந்தவர்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் அஷ்வினி சௌபே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனிடையே, தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ரேஹானை போலீசார் கைது செய்தனர். 

விபத்துக்குள்ளான கட்டடம் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளது என்பது தீயணைப்பு துறையினரிடம் இருந்து உரிய அனுமதி பெறப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.