இந்தியா

ரூ.70 ஆயிரம் கோடி செலவில் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு ஆயுதங்கள் வாங்க ஒப்புதல்!

webteam

இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு ஆயுதங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி கடற்படைக்கு 60 MADE IN INDIA UTILITY ஹெலிகாப்டர்கள், சூப்பர்சானிக் ஏவுகணைகள் வாங்க பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் 9 ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான திட்டங்களுக்கும், ராணுவத்துக்கு 307 ஏ.டி.ஏ.ஜி.எஸ். ஹோவிட்சர்கள் வாங்கவும ஒப்புதல் தரப்பட்டுள்ளது.