இந்தியா

தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு : பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்

EllusamyKarthik

தமிழ்நாட்டின் குன்னூரில் இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உயிரிழப்பிற்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

“ஜெனரல் பிபின் ராவத் நாட்டுக்காக அயரது சேவையாற்றினார். நாட்டின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதியாக அவர் நமது ஆயுதப் படைகளின் கூட்டுக்காக திட்டங்களைத் தயாரித்திருந்தார். அவரது அகால மரணம் நமது ராணுவத்துக்கும், நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்” என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  இரங்கல் தெரிவித்துள்ளார்.