இந்தியா

ப்ளூவேல் விளையாட்டால் விபரீதம்: மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த உத்தரவு

webteam

ப்ளூவேல் விளையாட்டால் ஏற்படும் விபரீதம் குறித்து மாணவர்களுக்கு கவுன்சலிங் நடத்த ஹரியானா மாநிலப் பள்ளிகளுக்கு சிறுவர்கள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ப்ளூவேல் விளையாட்டு மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும்‌ ஆபத்து தொடர்பாக கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்று சிறுவர்கள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ப்ளூவேல் சவாலால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து எடுத்துக்கூற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.