UP CM Yogi
UP CM Yogi pt desk
இந்தியா

பிரதமரை தொடர்ந்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் கொலை மிரட்டல்! காவல்துறை வழக்குப்பதிவு

Kaleel Rahman

இரண்டு நாள் பயணமாக நேற்று கேரள மாநிலம் கொச்சிக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் வருவதற்கு முன்பு மர்ம நபர் ஒருவர் பிரதமருக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்றை எழுதிருந்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட கேரள போலீசார், அந்த நபரை கண்டறிந்து கைது செய்தனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

PM Modi and CM Yogi

சம்பவத்தின்படி உத்தரப்பிரதேச அரசின் அவசரகால சேவை எண்ணான 112-க்கு அழைத்த மர்ம நபர் ஒருவர், 'நான் முதல்வர் யோகியை விரைவில் கொன்றுவிடுவேன்' என தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இந்த கொலை மிரட்டலை அடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506, 507 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 ஆகியவற்றின் கீழ் அந்நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.