இந்தியா

வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

jagadeesh

வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய நவம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டே, இக்கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 மற்றும் 2020ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் முடிவடைய இருந்தது. இந்நிலையில் அது மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.