இந்தியா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது - மத்திய அரசு

கலிலுல்லா

இந்தியாவில் ஒரே நாளில் 3.17 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று 2.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 3 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 491 பேர் சிகிச்சை பலனின்றி 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது.