இந்தியா

மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய இளைஞர் கொரோனா வார்டில் தற்கொலை

மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய இளைஞர் கொரோனா வார்டில் தற்கொலை

rajakannan

கேரளாவில் மருத்துவமனையிலிருந்து தப்பியோடி பின்னர் மீட்டுக் கொண்டுவரப்பட்ட இளைஞர் கொரோனா வார்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம் அனடு பகுதியைச் சேர்ந்தவர் உன்னி. இவர் கடந்த மாதம் தமிழகத்திற்குச் சென்று மது வாங்கி வந்துள்ளார். மே 28ம் தேதி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர், அவரை உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் சில நாட்களாக அவருக்கு கொரோனா பாதிப்புகள் கடுமையாக இருந்து வந்துள்ளது. இவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு உன்னி சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த ஜூன் 7ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என முடிவு வந்தது. ஆனால். இரண்டாவதாக நடத்தப்படும் சோதனையிலும் நெகட்டிவ் வந்தால் தான் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர். ஆனால், அதற்கு முன்பாகவே மருத்துவமனையிலிருந்து நேற்று உன்னி தப்பித்துச் சென்றுள்ளார்.

பின்னர், பேருந்து மற்றும் ஆட்டோ ரிக்ஷா மூலம் அவர் அனடுவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். இதற்கிடையில், நெடுமன்காடு பகுதியில் உள்ள உணவகத்தில் உணவு அருந்தியுள்ளார். ஆனால், அவரை உள்ளூர்வாசிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் அங்கு வந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் நீண்ட முயற்சிக்குப் பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், இன்று காலை 113.0 மணியளவில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் உன்னி தூக்கிட்டுக் கொண்டுள்ளார். பின்னர் அவரை ஐசியு-விற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை ஏற்கெனவே அவர் உயிரிழந்துள்ளார்.