இந்தியா

இந்தியா: 2 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

Veeramani

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியை கடந்திருக்கிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், நேற்று  3,68,147 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833 ஆக அதிகரித்திருக்கிறது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,449 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக உயர்ந்தள்ளது. தற்போது 34 லட்சத்து 47 ஆயிரத்து 133 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் கொரோனாவில் இருந்து ஒரு கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்து 292 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 15 கோடியே 89 இலட்சத்து 32 ஆயிரத்து 921 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.