மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், ஆட்சியமைக்க சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறிய நிலையில், 3 கட்சியினரும் ஆளுநரை நாளை சந்திக்கின்றனர்.
விவசாயிகள் பிரச்னை பற்றி கோரிக்கை மனு அளிப்பதாக அவர்கள் கூறிய நிலையில், ஆட்சியமைப்பது குறித்தும் ஆளுநருடன் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.