இந்தியா

''இந்திய முஸ்லீம் என்பதில் எனக்கு பெருமை'' - கண்ணீர் ததும்ப பேசிய குலாம் நபி ஆசாத்

webteam

இன்றோடு பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் காங்கிரஸ் எம்பி குலாம் நபிஆசாத் மாநிலங்களைவையில் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினார்.

பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். அங்குள்ள சூழ்நிலைகளை பற்றி நான் கேள்விப்பட்ட போது ஒரு இந்திய முஸ்லீமாக எனக்கு பெருமை கொள்கிறேன். தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஒழிய வேண்டும். எல்லையைக் காக்கும் வீரர்கள் நாட்டுக்காக உயிரிழப்பது எப்போது முடிவுக்கு வரும்? என கண்ணீர் மல்க பேசினார்.

முன்னதாக குலாம் நபி ஆசாத் பற்றி பேசிய பிரதமர் மோடி, “குலாம் நபி ஆசாத் எத்தனையோ பதவிகளை வகித்திருந்தாலும் அவருக்கு தலைக்கனம் இருந்தது இல்லை. என்றும் நான் குலாம் நபி ஆசாத்துக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்’’ என கண்ணீர் ததும்ப பேசினார்.