இந்தியா

ரோஹிங்கியா மீதான வன்முறைக்கு கண்டனம்

webteam

ரோஹிங்கியா மீதான வன்முறையை எதிர்த்து கேரள மாநிலத்தில் முஸ்லிம் ஜமாத் சார்பில் ‌கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. 

மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து கேரள மாநிலம் குமுளியில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. அப்போது மியான்மர் ராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தியாவிற்கு வரும் அகதிகளை மியான்மர் அரசு திரும்ப பெற வேண்டும் என்ற இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.