உயிரிழந்த மாணவன் ஹர்ஷித் கோட்னாலா
உயிரிழந்த மாணவன் ஹர்ஷித் கோட்னாலா pt web
இந்தியா

ஓசூர்: காணாமல் போன கல்லூரி மாணவர்; நடுக்காட்டில் சடலமாக மீட்பு - இணையத்தில் வைரலாகும் மாணவர் வீடியோ!

விமல் ராஜ்

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷித் கோட்னாலா (21). இவர் ஓசூர் அருகில் உள்ள கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் பயின்று வந்தார். இவர் அருகில் இருந்த கல்லூரியின் விடுதியில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில், வழக்கம் போல், கடந்த 21ம் தேதி மாணவர் ஹர்ஷித் கோட்னாலா பேருந்தில் செல்லவில்லை எனவும், கல்லூரிக்கும் செல்லவில்லை எனவும் கூறப்பட்டது.

இதையடுத்து விடுதி ஊழியர்கள் அங்குள்ள சிசிவிடி காட்சிகளைப் பார்த்த போது, மாணவன் நடந்து விடுதியில் இருந்து வெளியே சென்றது பதிவாகியிருந்தது. பின்னர் அவரது செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பல்கலைக்கழக நிர்வாகம், ஆனேக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்ததுள்ளனர்.

ஹர்ஷித் கோட்னாலா

இச்சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவனை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் இன்று காலை தெலகரஹள்ளி கிராமத்தில் உள்ள நீலகிரி தோப்பில் உடல் கருகிய நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததுள்ளது. தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று போலீசார், விசாரணை மேற்கொண்டதில், இறந்து கிடந்த மாணவன் ஹர்ஷித் என்பதும், அவரை பெட்ரோல் ஊற்றி, மர்மநபர்கள் எரித்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட மாணவன் ஹர்ஷித் கோட்னாலா

இதையடுத்து உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மாணவனைக் கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மாணவன் விடுதியில் இருந்து வெளியே செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.