இந்தியா

நிலக்கரி தட்டுப்பாடு: டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிப்பு

kaleelrahman

நாட்டில் உள்ள 21 அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்கள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. நாட்டில் உள்ள 135 அனல் மின் நிலையங்கள் 70 விழுக்காடு மின்சார தேவையை பூர்த்தி செய்கின்றன. இந்த நிலையில் நிலக்கரி இல்லையென்பதால் 21 அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கி சாமாளிக்கின்றன.