இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்

Veeramani

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

சோபியான் மாவட்டத்தில் உள்ள செர்மார்க் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இதில், சந்தோஷ் யாதவ், சவான் ரோமித் தனாஜி என்ற வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளில் ஒருவர் ராணுவத்தினாரால் கொல்லப்பட்டார்.