இந்தியா

பள்ளியை சுத்தப்படுத்திய முதலமைச்சர் யோகி

webteam

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தின் தூய்மை இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

லக்னோவில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் யோகி ஆதித்யநாத் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினார். அவருடன் நடிகர்கள் அக்சய் குமார், பூமி பட்னேகர் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்தனர். அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள தூய்மைப்பணி படிபடியாக மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.