இந்தியா

கொரோனா தடுப்பூசி விலை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

JustinDurai

கோவிஷீல்டு விலை உயர்வை நியாயப்படுத்தியவர்கள் கோவாக்சின் விலை உயர்வையும் நியாயப்படுத்துவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கோவாக்சின் மருந்து மாநிலங்களுக்கு 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிதம்பரம், தடுப்பூசி விலை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பதாக தெரிவித்துள்ளார். இரு நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கு மத்திய அரசு உதவுதாக குற்றம்சாட்டியுள்ள சிதம்பரம், ஏன் கட்டாய உரிமை சட்டத்தை அமல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.