இந்தியா

சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு 2ஆவது முறை கொரோனா

கலிலுல்லா

சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் T.S சிங் தியோ, 2ஆவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், லேசான அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை மேற்கொண்டதாகவும் அதில் தொற்று உறுதியானதாகவும் குறிப்பிட்டுள்ளார். வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைபெற்று வருவதாகவும் சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சிங் தியோ தெரிவித்துள்ளார்.

தம்முடன் தொடர்புடைய அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர் சிங் தியோ ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்.