இந்தியா

காப்பி அடிக்கும் மாணவர்கள்... கண்டு கொள்ளாத ஆசிரியர்கள்

webteam

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பொதுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரா பகுதியில் மாணவ மாணவிகள் தேர்வில் காப்பி அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆங்கில பாடத் தேர்வின் போது இந்த முறைகேடு நடந்திருக்கிறது. மாணவிகள் தேர்வறைக்கே புத்தகங்களை கொண்டு வந்து காப்பி அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.. இதே போல் தேர்வறைக்கு வெளியில் மாணவர்கள் காப்பி அடிக்க தயாராகும் காட்சிளும் இடம் பெற்றுள்ளன.. தேர்வறையிலேயே மாணவிகள் காப்பி அடிக்கும் போது ஆசிரியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. முறைகேடு நடந்த பகுதிகளில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தப் பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.