இந்தியா

மாநிலங்களவையில் தள்ளு முள்ளு - வெளியானது சிசிடிவி காட்சி

Sinekadhara

மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் அமளியால் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நேற்று கடைசி நாள் என்பதால் எதிர்க்கட்சி எம்பிக்கள் மேஜை மீது ஏறி நின்று முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில் அவைக் காவலர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. முன்னதாக ஒழுங்கீனமாக நடந்து கொண்ட உறுப்பினர்கள் மீது மாநிலங்களவை தலைவர் சிறப்பு கமிட்டி ஒன்றை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.