காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளது.
கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதுமட்டுமில்லாமல் ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் கர்நாடகா தரப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்படும் எனவும், காவிரி ஆணையம் அமைக்கவும், மாற்றவும் நாடாளுமன்றத்திற்கு உரிமை உள்ளது என்றும் கர்நாடகா அரசின் நீர்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடரில் கர்நாடகாவின் அனைத்து எம்பிக்களும் காவிரி விவகாரம் குறித்து பிரச்னை எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.