இந்தியா

பிபின் ராவத் இறப்பு குறித்து அவதூறு: பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு

நிவேதா ஜெகராஜா

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பு குறித்து அவதூறு பரப்பியதாக பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகள் மீது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவினர் இந்த நடடிவக்கையை எடுத்துள்ளனர். ஏற்கெனவே இரு தினங்களுக்கு முன் பிபின் ராவது இறப்பு குறித்தும், ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாகவும் வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.