இந்தியா

வேளாண் சட்டம்: சான் பிரான்சிஸ்கோவில் மத்திய அரசுக்கு ஆதரவாக இந்தியர்கள் கார் பேரணி

EllusamyKarthik

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் அறவழியில் போராடி வருகின்றனர் . இந்நிலையில் அமெரிக்கவின் சான் பிரான்சிஸ்கோவில் இந்திய அரசுக்கு ஆதரவாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் கார் பேரணி நடத்தியுள்ளனர். அங்குள்ள கடற்கரை பகுதியில் இந்த கார் பேரணியை ஞாயிறு அன்று அவர்கள் நடத்தியுள்ளனர். 

உலகம் முழுவதுமுள்ள பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் அண்மையில் ஆதரவு கொடுத்திருந்தனர். அது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில் அரசுக்கு ஆதரவாக இந்த பேரணி அங்கு நடைபெற்றுள்ளது. 

நன்றி : ANI