இந்தியா

’குட் நைட்’ சொல்லப் படுக்கை அறைக்கு வந்த வளர்ப்பு முதலை..!

webteam

வளர்க்கப்படும் குட்டி முதலை ஒன்று இரவு வணக்கம் சொல்லப் படுக்கையறைக்கு வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உலகின் அனைத்து இடங்களிலும் செல்லப் பிராணி பிரியர்கள் உள்ளனர். பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளாக நாய், பூனை, பறவைகள், வெள்ளை எலிகள், முயல்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. சிலர் விநோதமாக சிறுத்தைக் குட்டி, கரடிக் குட்டி, புலிக்குட்டி, சிங்கக்குட்டி உள்ளிட்டவற்றை அனுமதி பெற்று வளர்ப்பதும் உண்டு. இன்னும் சிலர் மலைப்பாம்பு, முதலை உள்ளிட்டவற்றைக் கூட வளர்ப்பார்கள்.

அந்த வகையில் முதலை வளர்ப்பவர் ஒருவர், தான் வளர்க்கும் குட்டி முதலை இரவு தொட்டிக்குள் செல்வதற்கு முன்பு தனது படுக்கையறைக்கு இரவு வணக்கம் சொல்லி முத்தம் வாங்க வந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் படுக்கை மீது ஊர்ந்து வரும் குட்டி முதலை, வளர்ப்பவர் மீது ஏறுகிறது.

அதன் தொண்டை பகுதியில் அந்த வளர்ப்பவர் செல்லமாகத் தடவிக்கொடுக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், இது ஆபத்தா ? இல்லை அன்பா ? எனக் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.