இந்தியா

பஞ்சாபில் பி.எஸ்.ஃஎப். உணகவத்தின் மீது துப்பாக்கிச்சூடு - வீரர் உயிரிழப்பு

JustinDurai

அமிர்தசரஸில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படைக்கு சொந்தமான உணவகத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பி.எஸ்.ஃஎப். வீரர் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்துள்ளனர்.

அமிர்தசரஸில் உள்ள காசா கிராமத்தில் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு சொந்தமான உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த உணவகத்தில் பி.எஸ்.ஃஎப். வீரர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் பி.எஸ்.ஃஎப். வீரர் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 10 பேர் குருநானக் தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர் கட்டப்பா என்ற வீரரும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: போரை நிறுத்துங்க: ஐநா சபைக்கு கோரிக்கை விடுத்த புதுச்சேரி புதுமணத் தம்பதியர்