இந்தியா

சர்ச்சை சாமியார் ஆசாராம்பாபுவின் ஆசிரமத்தில் காணாமல் போன சிறுமியின் உடல் கண்டெடுப்பு

Veeramani

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து காணாமல் போன சிறுமியின் உடல் மீட்கப்பட்டது பரபரப்பை உருவாக்கியுள்ளது 

ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து ஏப்ரல் 5 முதல் காணாமல் போன 13 அல்லது 14 வயது சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. அந்த சிறுமியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.



கடந்த 2013-ம் ஆண்டு ஜோத்பூர் ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது, அவருக்கு 2018 ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.