இந்தியா

ஹெலிகாப்டர் விபத்து: சூலூர் எடுத்துவரப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்கள்

Sinekadhara

விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் சூலூருக்கு கொண்டுவரப்பட்டன.

குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உட்பட 13 வீரர்களின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திற்கு தரைவழியாகக் கொண்டுவரப்பட்டன. அப்போது வழிநெடுகிலும் மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். சூலூரில் இருந்து விமானத்தில் உடல்களை டெல்லி கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நாளை ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.