இந்தியா

"பாஜகவினர் பொய் சொல்வதில் வல்லுநர்கள்" - மல்லிகார்ஜுன கார்கே

webteam

பாஜகவினர் பொய் சொல்வதில் வல்லுநர்கள் மக்களை தவறாக வழிநடத்துவதில் பயிற்சி பெற்றவர்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

டெல்லியில் இன்று காலை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மல்லிகார்ஜுன கார்கே , செய்தியாளர்களிடம் கூறுகையில் "அதானி விவகாரம் தொடர்பாக கூட்டு நாடாளுமன்ற குழுவின் முறையான விசாரணை அல்லது இந்திய தலைமை நீதிபதின் கண்காணிப்புக்கு கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை ஏன் மத்திய அரசு இதனை ஏற்க மறுக்கிறது, ஏன் பதற்றமாய் இருக்கிறார்கள் , நாங்கள் கேட்பதில் என்ன தவறு, அதை ஏன் செய்யக்கூடாது? அவர்கள் விவாதத்திலிருந்து ஓடுகிறார்கள், நாங்கள் அல்ல...

நாங்கள் ஒரு பிரச்னையை எழுப்புவதற்கு முன்பே, அவைகளை ஒத்தி வைக்கின்றனர். அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் அனுப்பிய நோட்டீஸ் பற்றி எந்த குறிப்பும் இல்லை. நாங்கள் குழப்பத்தை உருவாக்குகிறோம் என்று பொய் சொல்கிறார்கள். பாஜகவினர் பொய் சொல்வதில் வல்லுநர்கள்பொய் சொல்லி மக்களை தவறாக வழிநடத்துவதில் பயிற்சி பெற்றவர்கள் என்றார் அவர்.