இந்தியா

பீகார் அமைச்சர் கபில் தியோ காமத் கொரோனா பாதித்து மரணம்.

Veeramani

கொரோனா தொற்று காரணமாக பீகார் மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ்ய துறை அமைச்சர் கபில் தியோ காமத் இன்று அதிகாலை மரணடைந்தார்.

ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவரும்,  பீகார் பஞ்சாயத்து ராஜ்ய துறை அமைச்சருமான கபில் தியோ காமத் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று அதிகாலை மரணமடைந்தார். இவர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஏற்கெனவே அவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

அவரது  மறைவுக்கு  இரங்கல் தெரிவித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் "அவர் ஒரு திறமையான நிர்வாகி மற்றும் ஒரு பிரபலமான அரசியல்வாதி. அவரது மரணத்தால் நான் தனிப்பட்ட முறையில் வருத்தப்படுகிறேன். அவரது மரணம் அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.